தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு – இன்று முக்கிய ஆலோசனை!!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவது குறித்து புதிதாக பொறுப்பேற்று உள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கல்வித்துறையின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த இருக்கிறார்.
12 ஆம் வகுப்பு தேர்வுகள்:
தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றது. இதனால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் மே மாதம் நடைபெற இருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கபட்டு உள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு – கல்வி தொலைக்காட்சி பாட நேரம்!!
9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்பட்டு உள்ளனர். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்துவதில் அரசு தீவிரம் காட்டி வருகின்றது. அவர்களுக்கு செய்முறை தேர்வுகள் மட்டும் முடிந்துள்ள நிலையில், பொதுத் தேர்வுகள் கொரோனா பரவல் மற்றும் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஆகிய காரணங்களால் தள்ளி வைக்கப்பட்டது.
TN Job “FB Group” Join Now
இப்படியான சூழலில், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து இன்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்த இருப்பதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கூடுதலாக, மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகளை எப்போதும் போல் நடத்தலாமா?? அல்லது ஆன்லைன் மூலமாக மல்டிபிள் சாய்ஸ் கேள்விகளாக தேர்வினை நடத்தி விடலாமா?? என்றும் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.