இந்தியாவில் ஒரே நாளில் 26,115 பேருக்கு கொரோனா தொற்று – 252 பேர் உயிரிழப்பு!
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர் ஆகிய நிலவரங்கள் குறித்து அறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
கொரோனா நிலவரம்:
நாடு முழுவதும் கொரோனா முதல் மற்றும் இரண்டாம் அலை என கோரத்தாண்டவம் ஆடியது. இதனால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கொரோனா தாக்கம் படிப்படியாக கட்டுப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து ஊரடங்கில் தளர்வுகள் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா 2ம் அலையை தொடர்ந்து நோய்த்தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் கொரோனா 3ம் அலையாக இருக்குமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம்!
தற்போது வரை நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.45 லட்சத்தை தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.35 கோடியை தாண்டியுள்ளதாக தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், இறப்பு விகிதம் முதலியவற்றின் நிலவரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி சொந்த மண்ணில் விளையாட உள்ள போட்டிகள் – BCCI அட்டவணை வெளியீடு!
அதன்படி, 26,115 பேர் புதிதாக நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,35,04,534 ஆக அதிகரித்துள்ளது. 252 பேர் உயிரிழந்து உள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 4,45,385 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 34,469 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கை 3,27,49,574 ஆகவும், 3,09,575 பேருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் 80,85,68,144 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.