கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் காலிப்பணியிட எண்ணிக்கை உயர்வு !!!!
மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம் விளம்பர எண்.01/2019//DRB/CHN நாள்: 30.01.2020-இல் நகரக் கூட்டுறவு வங்கிகள்/கடன் சங்கங்கள், பணியாளர் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், திருவல்லிக்கேணி நகரக் கூட்டுறவுச் சங்கம் மற்றும் சென்னை மத்தியக் கூட்டுறவு அச்சகம் ஆகிய கூட்டுறவு நிறுவனங்களில் உதவியாளர் மற்றும் இளநிலை உதவியாளர் பதவிகளில் இருந்த 117 காலிப்பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 117 லிருந்து 125 ஆக உயர்ந்துள்ளது. 22.03.2020 அன்று நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வு 125 காலிப்பணியிடங்களுக்கும் நடத்தப்படும்.
அதே போல மாவட்ட ஆள் சேர்ப்பு நிலையம், சென்னை மாவட்டம் விளம்பர எண்.02/2019/02/2019/DRB/CHN நாள்:30.01.2020-இல் சென்னை மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கியில் உதவியாளர் பதவிகளில் இருந்த 203 காலிப்பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது மேற்படி காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 203 லிருந்து 286 ஆக உயர்ந்துள்ளது. 29.03.2020 அன்று நடைபெறவுள்ள எழுத்துத் தேர்வு 286 காலிப்பணியிடங்களுக்கும் நடத்தப்படும்.
அதிகரித்துள்ள காலிப் பணியிடங்களின் விவரங்கள் சென்னை மாவட்ட ஆள் சேர்ப்பு நிலைய இணையதளத்தில் (https://www.chndrb.in/) வெளியிடப்பட்டுள்ளன.
Download 3000 Vacancy Notification Details
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |