தமிழகத்தில் சூறைக்காற்றினால் பாதிப்படைந்த விவசாயிகளுக்கு இழப்பீடு – அமைச்சர் அறிவிப்பு!
தமிழகத்தில் வீசிய சூறைக்காற்றினால் அதிகளவிலான வாழைப்பயிர்கள் சேதம் அடைந்துள்ள நிலையில் அந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.
பயிர்கள் சேதம்:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டத்தில் திடீரென வீசிய சூறைக்காற்றினால் கிட்டத்தட்ட 1000 ஏக்கரில் உள்ள வாழைப்பயிர்கள் சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். அதாவது, ராமாபுரம், ஒதியடி குப்பம், கீரப்பாளையம், வழி சோதனை பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூவன், ஏலக்கி, மொந்தன், பேயன் உள்ளிட்ட பல்வேறு வகையான வாழை மரங்கள் கடுமையான சூறைக்காற்றினால் வேரோடு சாய்ந்திருக்கிறது.
தமிழகத்தில் மின் கட்டண உயர்வு ரத்து – மின்வாரியம் தகவல்!
மேலும், இன்னும் ஆறு மாதத்திற்குள் அறுவடைக்காக காத்திருந்த விவசாயிகளுக்கு இது மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், அரசு கட்டாயமாக ஏக்கருக்கு 1.5 லட்சம் வீதம் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணிப்பு செய்து வருவதாக தற்போது அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மேலும், சூறைக்காற்றினால் பாதிப்படைந்த விவகாரத்தில் விவசாயிகளுக்கு கட்டாயமாக இழப்பீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.