பள்ளி மாணவர்களுக்கு ஒரு குட் நியூஸ்….தமிழகத்தில் ஏப்ரல் 7 ஆம் தேதி விடுமுறை அறிவிப்பு…!!
திருவாரூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற தியாகராஜர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி ஆழித்தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். அதாவது, ஆயிரம் ஆண்டுகள் பழமையான இத்திருவிழாவானது, திருநாவுகரசரும், திருஞானசம்பந்தரும் இந்த ஆழித்தேரோட்டத்தை முன்னின்று நடத்த, சுந்தரர் கண்டு பரவசப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. அந்தவகையில், வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் ஆழித்தேரோட்டத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அளித்துள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் மோகனச்சந்திரன் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேலும், அன்றைய தினம் நடைபெறவிருக்கும் மக்கள் குறைதீர் கூட்டம் அதற்கு அடுத்த நாளான ஏப்ரல் 8 ஆம் தேதி அன்று நடைபெறும் எனவும் அறிவித்துள்ளார். மேலும், இந்த ஆழித்தேரோட்டத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், எந்தவித அசம்பாவிதங்களும் ஏற்படாமல் தவிர்க்க உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த விடுமுறை நாளை ஈடுசெய்யும் விதமாக வருகின்ற ஏப்ரல் 12 ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
























