UPSC தேர்வு கால அட்டவணை வெளியீடு – முக்கிய தகவல்!
யுபிஎஸ்சி தேர்வாணையம் ஆனது ஒருங்கிணைந்த புவி அறிஞர் மற்றும் புவியியலாளர் தேர்வுக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணை தற்போது வெளியிட்டுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வு:
யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் ஒருங்கிணைந்த புவி அறிஞர் தேர்வுக்கான 47 காலியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்டு, விண்ணப்ப பதிவு அப்போது துவங்கப்பட்டது. விண்ணப்ப பதிவுகள் அக்டோபர் 10ஆம் தேதி உடன் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது தேர்வுக்கான அதிகாரப்பூர்வ கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அட்டவணையின் படி 2024 பிப்ரவரி 18ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு தாள்களுக்கான ஒருங்கிணைந்த புவியறிஞர் முதன்மை தேர்வு நடைபெற உள்ளது.
TNPSC தேர்வுக்கு இதை மட்டும் படிங்க – நீங்க பாஸ்.. விவரம் இதோ!
முதல் தாள் காலை 9:30 மணி முதல் 11:30 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அட்மிட் கார்டு ஜனவரி மாதம் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முதன்மை தேர்வின் முடிவுகள் ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டு, மெயின் தேர்வு ஜூன் மாதம் 22ஆம் தேதி என்று நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு குறித்த மேலும் அதிக விவரங்களை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வாயிலாக தெரிந்து கொள்ளும்படி தேர்வர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.