ரயில் பயணம் செய்வோருக்கு புதிய வசதி – ரயில்வே நிலையத்தில் ரூம்!
இந்தியாவில் தினமும் லட்சக் கணக்கான மக்கள் ரயில் பயணம் செய்ய இருக்கின்றனர். பலர் ரயிலுக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுக்கு புதிய வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ரயில் பயணம்
இந்தியாவில் மக்கள் நெடுந்தூர பயணங்களுக்கு ரயில்களில் பயணம் செய்ய விரும்புகின்றனர். இந்நிலையில் ரயில் வர மக்கள் மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது. அதனால் அவர்களுக்கு இப்படி ஒரு வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதாவது ரயிலுக்காக காத்திருக்கும் உங்களுக்கு ரூம் புக்கிங் செய்யும் வசதி கிடைக்கிறது.
TNPSC தேர்வுக்கு இதை மட்டும் படிங்க – நீங்க பாஸ்.. விவரம் இதோ!
அதுவும் குறைந்த தொகையில் கிடைப்பதால் உங்களுடைய அறையை முன்பதிவு செய்யலாம். IRCTC மூலம் ஆன்லைனில் உங்களுடைய அறைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக முக்கிய ரயில் நிலையங்களில் ஓய்வு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த IRCTC ஓய்வு அறைகளை 24 மணி நேரம் முதல் 48 மணிநேரம் வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடியும். 24 மணி நேரமும் தங்கும் படுக்கைக்கு ரூ.10 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 24 மணி நேரம் முதல் 48 மணி நேரம் வரை ஓய்வெடுக்கும் அறைக்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.