கூட்டுறவு வங்கிகளின் நிலுவை நகைக்கடன் விபரங்கள் – பதிவாளர் சுற்றறிக்கை!!
முதல்வர் அறிவிப்பு:
தமிழகத்தில் நடப்பு ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. ஆளும் அ.தி.மு.க அரசு தேர்தலை முன்னிட்டு பல சிறப்பு திட்டங்களை மக்களுக்கு அறிவித்துள்ளது. அதில், 12ம் வகுப்பை தவிர்த்து 9, 10, 11ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்வதாக அறிவித்த செய்தி மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இதே போல் பல அறிவிப்புகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.
2021 நீட் தேர்வுகள் வழக்கமான முறையில் நடத்தப்படும் – மத்திய அரசு திட்டவட்டம்!!
நகைக்கடன் தள்ளுபடி:
நடந்து முடிந்த சட்டசபை கூட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் உள்ள 6 சவரன் வரையிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்வதாக தமிழக முதல்வர் அறிவித்தார். முதல்வரின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த அறிவிப்பை வெளியிட்டது முதல் தினமும் கூட்டுறவு வங்கிகளில் வாடிக்கையாளர்கள் நகைக்கடன் தள்ளுபடி குறித்து வங்கி அதிகாரிகளிடம் கேட்டு வருகின்றனர்.
சுற்றறிக்கை:
தமிழக பதிவாளர் அவர்கள் அனைத்து கூட்டுறவு சங்கங்களிலும் ஜனவரி 31ம் தேதி வரை நிலுவையில் உள்ள நகைக்கடன்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மேலும், நிலுவையில் உள்ள நகைக்கடன்கள் பற்றிய விவரங்களை தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்குமாறும் பதிவாளர் சுற்றறிக்கையில் தெரிவித்துளளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Ene one work only arasu velai