மாநிலம் முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடல்? கொரோனா பரவல் எதிரொலி! அமைச்சர் முக்கிய தகவல்!
கர்நாடகா மாநிலத்தில் உள்ள பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள மாணவர்களிடையே தொடர்ச்சியாக கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்த சில முக்கிய தகவல்களை கர்நாடக கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
பள்ளிகள் மூடல்
இந்தியாவில் தற்போது தான் கொரோனா 2ம் அலை தொற்று கட்டுக்குள் வந்திருக்கும் நிலையில், ஒவ்வொரு மாநிலங்களிலும் பள்ளிகளை திறக்கும் நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பலரும் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் தற்போது ஒமிக்ரான் வைரஸின் ஆதிக்கமும், அச்சமும் அதிகரித்து வருவதால் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது.
TNPSC குரூப் 2 தேர்வில் வெற்றிப் பெற்றால் கிடைக்கும் வேலைகள் – முழு விபரங்கள் இதோ!
அந்த வகையில் கர்நாடகா மாநிலத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் சூழலில் ஒமிக்ரான் மாறுபாட்டின் பயமும் அதிகரித்து வருவதால், அரசாங்கம் இந்த நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், அப்படி கொரோனா வழக்குகள் இருப்பது கண்டறியப்பட்டால் பள்ளிகளை மூட அரசு தயங்காது என்றும் கர்நாடகா கல்வி அமைச்சர் பிசி நாகேஷ் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்வி அமைச்சர், ‘கர்நாடகா கல்வித் துறை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்ற அடிப்படையில் மாணவர்களிடைய கொரோனா தொற்றின் நிலைமையை கண்காணித்து வருகிறது. அந்த வகையில் கொரோனா வழக்குகள் கடுமையாக அதிகரிக்கும் பட்சத்தில் பள்ளிகளை மூடுவதற்கும், தேர்வுகளை ரத்து செய்வதற்கும் நாங்கள் விருப்பம் தெரிவித்து வருகிறோம். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கவும் அரசு தயங்காது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழக விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம் – பரிசோதனை கட்டணம் குறைப்பு!!
இதனை தொடர்ந்து தற்போது கோவிட் வழக்குகள் அதிகம் பதிவாகியுள்ள கர்நாடகா குடியிருப்பு பள்ளிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அப்பள்ளிகளில் கொரோனா தொற்றின் நிலைமையை கண்காணிக்கவும், நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றுவதை உறுதி செய்யவும் மாவட்ட ஆணையர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இப்போது பள்ளிகள் மற்றும் விடுதிகளில் அதிகரித்து வரும் கொரோனா வழக்குகள் குறித்து முதலமைச்சர் பசவராஜ் பொம்மை சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார்.
அதாவது, ‘நிபுணர்கள் வழங்கிய அனைத்து வழிகாட்டுதல்களை செயல்படுத்தியும், பள்ளி மாணவர்களிடையே கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. சிக்கமகளூரு மாவட்டத்தில் மட்டும் தொடர்ச்சியாக பலருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது. இப்போது மற்ற அனைத்து மாணவர்களின் தொடர்புகளும் கண்டறியப்பட்டு, சோதனை செய்யப்பட்டு பள்ளிகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளன. இது போன்ற எந்தவொரு சந்தர்ப்பத்தையும் எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக உள்ளது. நிபுணர்கள் வழங்கும் வழிகாட்டுதல்களின்படி செயல்படுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.