தமிழக விமான நிலையங்களில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரம் – பரிசோதனை கட்டணம் குறைப்பு!!
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒமைக்ரான் பரவிய நாடுகளில் இருந்து தமிழகம் வந்த 7,466 பேர் வீட்டுத்தனிமையில் உள்ளனர் என்று மருத்துவத்துறை தகவல் அளித்துள்ளது.
கொரோனா பரவல்:
இந்தியாவில் கடந்த வருடம் முதல் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. வெளிநாட்டு பயணிகளால் தான் தொற்று அதிகம் பரவுகிறது என்று கண்டறியப்பட்டு தொற்று தடுப்பு நடவடிக்கையாக விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டது. அதன் பிறகு கடும் கட்டுப்பாடுகள் மற்றும் தடுப்பூசிகள் பயன்பட்டால் கொரோனா தாக்கம் குறைய ஆரம்பித்தது இந்த நிலையில் அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்தது. மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி கொண்டிருக்கும் நிலையில் தற்போது மற்றொரு தாக்குதலாக ஓமைக்ரான் பரவி வருகிறது.
கொரோனா தொற்றில் இருந்து உருமாற்றம் அடைந்த புதிய வகை ஓமைக்ரான் வைரஸ் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் இந்தியாவிலும் பரவ தொடங்கி விட்டது. ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ்களை கட்டுப்படுத்தும் விதமாக நமது நாட்டில் உள்ள விமான நிலையங்களில் கண்காணிப்பு மற்றும் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை தொடர்ந்து தமிழகத்தில் ஒமிக்ரான் பரவிய நாடுகளில் இருந்து வந்த 7,466 விமான பயணிகள் வீட்டு தனிமையில் உள்ளனர். டிசம்பர் 1 முதல் இன்று வரை 7,473 பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள்? ஓமைக்ரான் பரவல் எதிரொலி!!
மேலும் இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. துரித பரிசோதனை கட்டணம் ரூ.3,400ல் இருந்து ரூ.2,900ஆகவும், த ஆர்டி பிசிஆர் பரிசோதனை கட்டணம் .700ல் இருந்து .600 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. ராபிட் டெஸ்ட் கட்டணம் ரூ.3,400 ல் இருந்து ரூ.2,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ராபிட் டெஸ்ட் மூலம் 45 நிமிடங்களில் சோதனை முடிவுகள் கண்டறியப்படுகிறது. இதுவரை பரிசோதிக்கப்பட்டதில் யாருக்கும் ஒமிக்ரான் தொற்று இல்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.