ஆகஸ்ட் மாதம் சிவில் சர்விஸ் தேர்வுகள் – ஒடிசா அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு!
ஒடிசா அரசு பணியாளர் தேர்வாணையம் கடந்த 2020ம் ஆண்டுக்கான சிவில் சர்விஸ் தேர்வுகளை வரும் ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நடத்த இருப்பதாக அறிவித்துள்ளது.
சிவில் சர்விஸ் தேர்வு:
ஒடிசா மாநிலத்தில் அரசு பணியாளர் தேர்வாணையம் அரசு அலுவலகங்களில் பணியாளர்களை நியமனம் செய்ய போட்டித்தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் தகுதியுள்ள நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு முதல் கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் எந்த விதமான அரசு தேர்வுகளும் நடத்தப்படவில்லை. பாதிப்புகள் அதிக அளவில் இருந்ததால் மக்களின் நலன் கருதி தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டது.
தமிழகத்தில் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் – அறிவிப்பு வெளியீடு!
இந்நிலையில், ஒடிசா அரசு பணியாளர் தேர்வாணையம் நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2020 ஆம் ஆண்டிற்கான OPSC சிவில் சர்விஸ் முதன்மை தேர்வுகளை ஆகஸ்ட் மாதம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. தேர்வுகள், ஆகஸ்ட் 27ம் தேதி காலை 10 மணிக்கு மற்றும் மதியம் 1.30 – 3.30 மணி வரை நடத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் கூடுதலாக 40 நிமிடங்கள் வழங்கப்படும் என்று OPSC தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
தேர்வுக்கு முன்னதாக விண்ணப்பித்தவர்களில் தகுதியானவர்களின் சேர்க்கை சான்றிதழ் மற்றும் வழிகாட்டுதல்கள் தேர்வு கமிஷன் இணையதளத்தில் வெளியிடப்படும். மேலும், தேர்வுக்கான நுழைவுச்சீட்டு மற்றும் தேர்வு வழிமுறைகள் குறித்த அதிக தகவல்களை விண்ணப்பதாரர்கள் OPSC இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கடந்த 2019ம் ஆண்டு சிவில் சர்விஸ் முதன்மை தேர்வுகளை மொத்தம் 44,636 பேர் எழுதியிருந்தனர்.