1மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இல்லை – சீன அரசு தகவல்!
சீனாவில் இனி 6 முதல் 7 வயது வரை உள்ள 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு நடத்துவதை சீன அரசு தடை செய்துள்ளது. குழந்தை மற்றும் பெற்றோர்களுக்கு தேர்வினால் ஏற்படும் மனஅழுத்தத்தை குறைப்பதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
சீன அரசின் முடிவு:
கல்வி என்பது குழந்தைகளுக்கு அறிவும்,மகிழ்ச்சியும் அளிக்க வேண்டுமே தவிர அவர்களை சிரமப் படுத்தக் கூடாது. கல்வியில் முந்தைய காலத்தில் தேர்வு என்பது இல்லை. காலம் மாற மாற டெர்வ் என்ற முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதிலும், தற்போதைய காலத்தில் பாடத்திட்டங்கள் அளவுக்கு மீறிய அழுத்தத்தை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. சிறிய வயது குழந்தைகள் தேர்வு என்றாலே பயப்படும் சூழல் உள்ளது. இதனால் இவர்களின் பெற்றோர்களும் கவலைக்கு உள்ளாகின்றனர்.
Tokyo Paralympics 2020 : வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு! இந்தியாவிற்கு இரட்டை பதக்கம்!
இதனை கவனத்தில் கொண்ட சீன அரசின் கல்வி அமைச்சகம் இது குறித்து புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 7 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு தேர்வு நடத்துவதை தடை செய்துள்ளது. மேலும், குழந்தைகள் தேர்வு குறித்து ஏற்படும் மனஅழுத்தம் அவர்களது உடலையும், மனதையும் பாதிக்கிறது. ஒரு சில பள்ளிகளில் அளவுக்கு அதிகமான தேர்வுகளின் மூலம் மாணவர்களுக்கு அதிக நெருக்கடியை கொடுக்கின்றனர். தேர்வு என்பது கல்வியின் ஒரு பகுதி தான். இந்த முறையை மாற்ற வேண்டும்.
TN Job “FB
Group” Join Now
அதன்படி, தொடக்க நிலை கல்வியில் 1 மற்றும் 2ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி தேர்வுகள் நடத்தப்படாது. மற்ற மாணவர்களுக்கு ஒரு காலாண்டில் எத்தனை தேர்வுகள் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் இறுதி தேர்வுகள் மட்டுமே நடத்தப்படும். ஆரம்ப நிலை மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள், மண்டல தேர்வுகள் நடத்தப்படாது. மேலும், தொடக்க நிலை மாணவர்களுக்கு அங்கு வீட்டுப்பாடம் கொடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலை மாணவர்களுக்கு தினமும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே செலவிடும் வகையில் வீட்டுப்பாடம் கொடுக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது.