Tokyo Paralympics 2020 : வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலு! இந்தியாவிற்கு இரட்டை பதக்கம்!
டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த உயரம் தாண்டுதல் வீரர் மாரியப்பன் தங்கவேலு அமெரிக்காவின் கிரேவ் சாம் என்பவருடன் இறுதி கட்டம் வரை மோதி, வெள்ளி பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
உயரம் தாண்டுதல்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வரும் 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவை சேர்ந்த சுமார் 54 வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டு வருகின்றனர். இந்த ஆண்டு பாராலிம்பிக் போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து வரும் இந்திய அணி வீரர்கள், ஒவ்வொரு நாளும் பதக்கங்களை குவித்து கொண்டுள்ளனர். பாராலிம்பிக் போட்டிகள் துவங்கிய 8 ஆவது நாளான இன்றும் (ஆகஸ்ட் 31) இந்திய வீரர் ஒருவர் இந்தியாவுக்கான பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.96 குறைவு – இன்றைய நிலவரம்!
அந்த வகையில் இன்று காலை நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வீரர் சிங்ராஜ் வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றினார். இதையடுத்து இன்று (ஆகஸ்ட் 31) மாலை 3:55 மணியளவில் துவங்கிய உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழகத்தை சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டார். இந்த போட்டியின் துவக்கத்தில் இருந்து முன்னிலை வகித்த மாரியப்பன், தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
TN Job “FB Group” Join Now
எனினும் அமெரிக்காவை சேர்ந்த கிரேவ் சாம் என்பவருடன் தங்கப்பதக்கத்துக்கான போட்டியில் களம் கண்டார். அந்த வகையில் உயரம் தாண்டுதலில் 1.88 மீட்டர் வரை தாண்டி கிரேவ் சாம் முதலிடத்தை பெற்றுள்ளார். இவரை தொடர்ந்து மாரியப்பன், 1.86 மீட்டர் வரை உயரம் தாண்டி 2 ஆவது இடத்தை பெற்றிருந்த தனது மூன்றாவது மற்றும் இறுதி முயற்சியிலும் 1.88 மீ உயரத்தை தொடவில்லை. இதன் மூலம் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கத்தை தனதாக்கினார்.