செஸ் ஒலிம்பியாட் 2024: முதலிடத்தில் தொடரும் இந்திய மகளிர் அணி!!
45 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் கடந்த செப்டம்பர் 10 ஆம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் ஓபன் பிரிவு 6ஆவது சுற்றில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று அசத்தியுள்ளது. அதாவது ஆர்மீனியா அணியை எதிர்கொண்ட இந்திய அணி 2.5 – 1.5 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.
உங்களுடைய வங்கி கணக்கு என்னானு தெரியுமா..? அதை தெரிஞ்சிக்காம விட்ட உங்களுக்கு ஆபத்து ஆகிரும்..!!
இதன் விளைவாக 12 புள்ளிகளை பெற்ற இந்திய அணி, முதலிடத்தில் தொடர்கிறது. ஆண்கள் பிரிவில் ஹங்கேரியை சந்தித்த இந்திய அணி 3-–1 என்ற கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் வரலாற்றில் முதல் முறையாக நேரடி செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 2 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய செஸ் வீரர்கள் அர்ஜுன் எரிகைசி 4-வது இடத்திலும், குகேஷ் டி 5-வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


























