சென்னையில் ஜனவரி 30 முதல் போக்குவரத்து மாற்றம் – நிர்வாகம் அறிவிப்பு!

0
சென்னையில் ஜனவரி 30 முதல் போக்குவரத்து மாற்றம் - நிர்வாகம் அறிவிப்பு!
சென்னையில் ஜனவரி 30 முதல் போக்குவரத்து மாற்றம் - நிர்வாகம் அறிவிப்பு!
சென்னையில் ஜனவரி 30 முதல் போக்குவரத்து மாற்றம் – நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் கட்டுமான பணிகள் காரணமாக ஜனவரி 30-ம் தேதி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து மாற்றம்:

சென்னை மாநகர் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது போக்குவரத்து நெரிசல் தான். ஒவ்வொரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலே போக்குவரத்து நெரிசல் காரணமாக நேரம் அதிகம் செலவாகும். இந்நிலையில் தெற்கு உஸ்மான் சாலை மேம்பாலத்தை சிட்நகர் முதலாவது பிரதான சாலையாக நீட்டிப்பதற்காக, சென்னை கிரேட்டர் போக்குவரத்து காவல்துறை திநகரில் போக்குவரத்தை மாற்றி அமைத்துள்ளனர்.

Follow our Twitter Page for More Latest News Updates

அதன் படி தெற்கு உஸ்மான் சாலையில் சிட்நகர் 3வது பிரதான சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் கண்ணம்மாபேட்டை சந்திப்பு மற்றும் தென்மேற்கு போகம் சாலை வழியாக திருப்பி விடப்படும் எனவும், உஸ்மான் மேம்பாலத்தில் இருந்து தெற்கு உஸ்மான் சாலைக்கு செல்ல விரும்பும் எம்டிசி பேருந்துகள், மேட்லி சந்திப்பு- புர்கிட் சாலை- மூப்பரப்பன் தெரு- இணைப்பு சாலை- நந்தனம் சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் 2023: வருமான வரி வரம்பு ரூ.6 லட்சமாக உயர்வு? நிதியமைச்சரால் விரைவில் அறிவிப்பு வெளியீடு!

அரங்கநாதன் சுரங்கப்பாதையில் இருந்து தெற்கு உஸ்மான் சாலையில் கண்ணம்மாபேட்டை சந்திப்பு வழியாக சிட் நகர் 3வது பிரதான சாலைக்கு செல்ல விரும்பும் எம்டிசி பேருந்துகள் மேற்கு சிட் நகர் வடக்கு தெரு வழியாக திருப்பி விடப்படும் எனவும், இந்த நடைமுறை ஜனவரி 30 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த மாற்றம் செப்டம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!