
IPL 2025: நீண்ட நாட்களுக்கு பிறகு CSK விற்கு கிடைத்த வெற்றி.. மாஸ் காட்டிய கேப்டன் தோனி.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!!
ஐபிஎல் 2025 சீசனின் 30 வது ஆட்டம் லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் எம்.எஸ். தோனி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய சிஎஸ்கே அணி 19.3 ஓவர் முடிவில் 168 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
மாநில உரிமைகளை பாதுகாக்க புதிய நடவடிக்கை…!! சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..!!
இப்போட்டியில் “லக்னோ அணியை சார்ந்த ரிஷப் பண்ட்(63), மிட்செல் மார்ஷ் (30), ஆயுஷ் பதோனி (22) ஆகியோர் அதிகபட்ச ரன்கள் எடுத்தனர். மேலும், சென்னை அணிக்காக விளையாடிய ரவீந்திரா (37), ஷேக் ரஷீத் (27), சிவம் துபே (43), தோனி (26) ஆகியோர் அதிகபட்ச ரன்கள் குவித்தனர். இதை தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா, மதீஷா பதிரனா தலா 2 விக்கெட்டும், கலீல் அகமது மற்றும் அன்ஷுல் கம்போஜ் தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர். இந்நிலையில் நேற்று நடந்த போட்டியில் அதிரடி ஃபினிஷிங், ஸ்டம்பிங், ரன் அவுட் என அனைத்திலும் அசத்திய கேப்டன் எம்.எஸ். தோனி 18-வது முறையாக ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது”.

























