டாஸ்மாக் கடையில் அலைமோதும் கூட்டம் – சீரானதா சென்னை?

0
டாஸ்மாக் கடையில் அலைமோதும் கூட்டம் - சீரானதா சென்னை?
டாஸ்மாக் கடையில் அலைமோதும் கூட்டம் - சீரானதா சென்னை?
டாஸ்மாக் கடையில் அலைமோதும் கூட்டம் – சீரானதா சென்னை?

சென்னையில் மதுக்கடைகளில் மீண்டும் கூட்டம் அலைமோதுவதாக தகவல்கள் வந்துள்ளது. இதனால் மீண்டும் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வந்து விட்டது என்று இணையவாசிகள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

சென்னை:

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று மிக்ஜாம் புயலாக உருவெடுத்தது இந்த புயல் சென்னையில் எதிர்பாராத அளவிற்கு பல்வேறு சேதங்கங்களை ஏற்படுத்தி உள்ளது. தொடர் கனமழையால் தண்ணீர் தேங்கி வீடுகளில் புகுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு நாட்களாக மீட்பு பணிகளை மாநகராட்சி தீவிரபடுத்தியுள்ளது. தேசிய பேரிடர் மேலாண்மை குழு மூலமாக ஒவ்வொரு பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்ட அவர்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

B.Ed பட்டதாரிகளுக்கு ஆசிரியர் தகுதி ரத்து – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இன்னும் பெரும்பாலான பகுதிகள் சீராக இல்லை என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர் . இந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. பாதிப்பில் இருந்து மீண்டும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மறுபுறம் பல இடங்களில் தண்ணீர் வடியாமல் தேங்கி இருப்பதாகவும் அத்தியாவசிய பொருட்கள் இல்லாமல் தவிப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறி வருகின்றனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!