நகரும் மிக்ஜாம் புயல் – மீண்டும் வரும் சென்னை.. பணிகள் தீவிரம்!
மிக்ஜாம் புயல் தற்போது வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் மழை சற்று குறைந்துள்ளதால் சென்னை படிப்படியாக மீள தொடங்கியுள்ளது.
மீளும் சென்னை
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று முழுவதும் தொடர்ந்து பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகள் வணிக வளாகங்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து பெய்யும் மழையால் போக்குவரத்து சேவைகள் முழுவதுமாக முடக்கப்பட்டது. மேலும் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படுள்ளது.
ரேஷன் கடைகளில் 42 பொருட்களின் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் ஷாக்!!
தற்போது புயலானது வடக்கு திசை நோக்கி நகர தொடங்கியுள்ளதால் மழையின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நிலையில் மாநகராட்சி மீட்பு பணிகளில் வேகம் காட்டி வருகிறது. தண்ணீர் அகற்றப்பட்ட பகுதிகளில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மட்டும் தேவை கருதி பேருந்துகளும் இயக்கப்படுகிறது. படிப்படியாக சென்னை விரைவில் மீண்டு வர தொடங்கியுள்ளது.