அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழக்கு – இடைக்கால தடை விதிக்க மறுப்பு!!

0
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழக்கு - இடைக்கால தடை விதிக்க மறுப்பு!!
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழக்கு - இடைக்கால தடை விதிக்க மறுப்பு!!
அரசுப்பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழக்கு – இடைக்கால தடை விதிக்க மறுப்பு!!

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளில் சேருவதற்கு அரசு பள்ளி மாணவர்களுக்காக 7.5% இடஒதுக்கீடு அறிவித்திருந்தது. இந்த ஒதுக்கீட்டினை தடை செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இந்த வழக்கிற்கு இடைக்கால தடை வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கான இடஒதுக்கீடு:

மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அரசு சார்பில் 7.5% இடஒதுக்கீடு வழங்கபடுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல தனியார் பள்ளி மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த ஒதுக்கீடு காரணமாக எங்களுக்கு தகுதி இருந்தும் இடம் கிடைக்காமல் போவதால் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு வழங்குவதற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டு முதல் பள்ளிகள் திறப்பு – 69% பெற்றோர்கள் ஆதரவு! கருத்துக்கணிப்பில் தகவல்!!

ஏற்கனவே முதல் கட்ட மருத்துவ கலந்தாய்வு நவம்பர் மாதம் 24-ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 18-ஆம் தேதி வரை நடைபெற்றது. பின் இரண்டாம் கட்ட கலந்தாய்வு நேற்று முதல் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. நேற்று முடிந்த கலந்தாய்வில் முடிவில் 47 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது. இந்நிலையில் இந்த இடஒதுக்கீடு ரத்து செய்வது குறித்து வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அவ்வையார் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!

இதில் மனு தரப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடு வழங்குவதால் தகுதி இருந்தும் எங்களுக்கு உரிமைகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. தொடர்ந்து அரசு தரப்பில் ஏற்கனவே கலந்தாய்வு நடைபெற்று மாணவர்கள் சேர்க்கை முடிந்து விட்டதாகவும், அகில இந்திய ஒதுக்கீட்டில் திரும்ப வழங்கப்பட்ட இடங்களுக்கு கலந்தாய்வு தற்போது நடந்து வருவதாகவும் இதனால் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க கூடாது என கோரிக்கை வைக்கப்பட்டது.

பின் தீர்ப்பளித்த நீதிபதிகள் இந்த வழக்கு குறித்து எதிர்தரப்பினர் கருத்தை ஏற்றுக் கொள்வதாகவும் இந்த வழக்கு தொடர்பாக இடைக்கால தடை விதிக்க முடியாது எனவும், இதுகுறித்த மனுவை 2 வாரங்களில் சமர்பிக்க கோரி வழக்கை ஒத்தி வைத்தனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!