“நீட் என்னால் முடியும்” சிறப்பு பயிற்சி திட்டம் – சென்னையில் இன்று முதல் தொடக்கம்!!
2021-22 ஆம் கல்வியாண்டில் சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகளில் பயிலும் 101 மாணவ, மாணவியருக்கு “நீட் என்னால் முடியும்” சிறப்பு பயிற்சி திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் இன்று தொடங்கி வைத்தார்.
“நீட் என்னால் முடியும்” சிறப்பு பயிற்சி திட்டம்:
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பள்ளிகளில் 2020-21 கல்வியாண்டில் பயிலும் மாணவர்களுக்கு மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத “நீட் என்னால் முடியும்” சிறப்பு பயிற்சி திட்டம் தொடக்க நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சி ஆணையர் இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் தொடங்கி வைத்தார்.
TN Job “FB
Group” Join Now
அப்போது பேசிய அவர் கூறுகையில், “2019-2020 கல்வி ஆண்டில் தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட 7.5% இடஒதுக்கீடு மூலமாக நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்றவர்களில் 60 மாணவர்களில் 11 மாணவ, மாணவியர்கள் தேர்ச்சி பெற்று மாணவர் சேர்க்கை பெற்றுள்ளனர்.
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் ‘ஆல்பாஸ்’ ரத்து – தனியார் பள்ளிகள் கோரிக்கை!!
இதே போல 2020-21 கல்வியாண்டில் அதிகப்படியான மாணவர்கள் சேர்ந்து படிக்க இன்னர் வீல் டிஸ்ட்ரிக்ட் 323 (Inner Wheel District 323) மற்றும் கிண்டி பொறியியல் கல்லூரி முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பு (CEG-80) மூலமாக சென்னை மாநகராட்சி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி 100 நாட்கள் இலவசமாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பிப்.27 சிவகங்கையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!
இந்த திட்டத்திற்கு ‘நீட் (NEET) என்னால் முடியும்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் சேர சென்னை மாநகராட்சி பள்ளியிகளில் பயிலும் 101 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 50 மாணவ- மாணவியர்கள், புலியூர் பள்ளி மையத்தில் தேர்வு எழுதிய 130 மாணவ, மாணவிகளில் 51 மாணவிகள் என மொத்தம் 101 மாணவ, மாணவியர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்குத் தக்க வல்லுநர்களைக் கொண்டு 100 நாட்களுக்கு முழுமையான நீட் பயிற்சி வழங்கப்படும்’, இவ்வாறு அவர் கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்