தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் ‘ஆல்பாஸ்’ ரத்து – தனியார் பள்ளிகள் கோரிக்கை!!

0
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் 'ஆல்பாஸ்' ரத்து - தனியார் பள்ளிகள் கோரிக்கை!!
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் 'ஆல்பாஸ்' ரத்து - தனியார் பள்ளிகள் கோரிக்கை!!
தமிழகத்தில் 9 முதல் 11ம் வகுப்பு மாணவர்கள் ‘ஆல்பாஸ்’ ரத்து – தனியார் பள்ளிகள் கோரிக்கை!!

தமிழகத்தில் 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்தது குறித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் தேர்வுகள் ரத்து செய்வதற்கான அறிவிப்பை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

பள்ளிகள் போராட்டம்:

தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளிகள் 10 மாதங்களாக மூடப்பட்டன. இந்நிலையில் 9, 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. தற்போது மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் இறுதித்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு நடப்பு கல்வியாண்டில் 100% தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் 110வது விதியின் கீழ் உத்தரவிட்டார்.

TN Job “FB  Group” Join Now

இந்த அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தினர் 500க்கு மேற்பட்டோர் சென்னையில் பள்ளிகல்வித்துறை அலுவலகம் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பள்ளிகளைத் திறக்கவும், தேர்வுகளை நடத்தவும் வலியுறுத்தி தனியார் பள்ளிகள் நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பிப்.27 சிவகங்கையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!!

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு நர்சரி, பிரைமரி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறுகையில், “9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் இன்றி தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு காரணமாக மாணவர்களின் வாழ்க்கை, கல்வித்தரம் பாதிக்கப்படும். உயர் படிப்புகளில் அவர்களின் தரம் குறைக்கப்படும்.

அண்ணா பல்கலையில் 4% மட்டுமே அரசுப்பள்ளி மாணவர்கள் – ஆர்டிஐ தகவல்!!

கடந்த ஆண்டு கொரோனா காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டது ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு பள்ளிகள் திறக்கப்பட்டு அவர்களிடம் தேர்வு கட்டணம் வசூலிக்கப்பட்டு மாதிரி தேர்வுகள் நடத்தப்படும் நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானது ஏற்றுக் கொள்ள முடியாது. அரசியல் காரணங்களுக்காக மாணவர்களின் எதிர்காலத்தில் விளையாடுவது தவறான செயலாக உள்ளது. எனவே அரசு இந்த உத்தரவு திரும்ப பெற வேண்டும்”, இவ்வாறு அவர் கூறினார்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!