சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் – மத்திய அரசு அறிவிப்பு!

0
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு!
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் - மத்திய அரசு அறிவிப்பு!
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம் – மத்திய அரசு அறிவிப்பு!

இரண்டாவது காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

வட்டி விகிதம்:

ஒவ்வொரு ஆண்டும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் அரசு மாற்றங்களை அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜூலை முதல் செப்டம்பர் மாதம் வரையிலான இரண்டாவது காலாண்டுக்கான வட்டி விகிதத்தை மத்திய அரசு தற்போது அறிவித்திருக்கிறது. அதாவது, சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதம் 0.1% முதல் 0.3 % வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஓராண்டு கால டெபாசிட்டிற்கான வட்டி விகிதம் 6.8% த்தில் இருந்து 6.9% ஆகவும், ஐந்தாண்டு கால தொடர் வைப்பிற்கான வட்டி விகிதம் 6.2 சதவீதத்தில் இருந்து 6.5% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது.

தமிழகத்தில் இன்று (ஜூலை 1) முதல் மின் கட்டண உயர்வு அமல் – பொதுமக்கள் கவனத்திற்கு!

மேலும், பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்புத் திட்டத்திற்கான வட்டி வீதத்தில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. 8 சதவீத வட்டி விகிதமே நீடிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டத்திற்கான வட்டியிலும் எவ்வித மாற்றமும் இல்லாமல் 8.2சதவீதமே நீட்டிக்கப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்திருக்கிறது. இதே போல, தேசிய சேமிப்பு திட்டம், பொது வருங்கால வைப்பு நிதி திட்டம் ஆகிய திட்டத்திற்கான வட்டியிலும் எவ்வித மாற்றமும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!