இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளில் மாற்றம் – 30 நாட்களில் புகார்களுக்கு தீர்வு!
நாடு முழுவதும் தகவல் தொழில்நுட்ப விதிகள் முறையாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இனி மாற்றம் செய்யப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகள் தான் கடைபிடிக்கப்படும்.
தகவல் தொழில்நுட்ப விதிகள்:
கடந்த வருடம் சமூக வலைத்தள நிறுவனங்கள் அனைத்திற்கும் இந்திய தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சகம் கட்டுப்பாடுகளை விதித்தது. அரசின் இந்த கட்டுப்பாடுகளுக்கு ஒப்புதல் அளிக்காத நிறுவனங்களின் செயலிகள் இனி இந்தியாவில் செயல்பட முடியாது என்று எச்சரித்தது. இதனால் கூகுள், இன்ஸ்டாகிராம், மெட்டா, வாட்ஸ்அப் போன்ற அனைத்து நிறுவனங்களும் இந்திய தகவல் தொழில்நுட்ப கொள்கைகளுக்கு சம்மதம் அளித்தன.
Exams Daily Mobile App Download
இந்நிலையில், இந்திய தகவல் தொழில்நுட்ப விதிகளில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, நாட்டில் பயன்படுத்தப்படும் அனைத்து சமூக ஊடக செயலிகளில் உள்ள தகவல்களை ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு குறைகேட்பு மேல்முறையீடு குழுக்களை அமைத்துள்ளது. முன்னதாக பயனர்களின் புகார்கள் 3 மாத காலத்திற்குள் தீர்க்கப்பட்டு வந்த நிலையில், இனி பயனர்களின் புகார்கள் 30 நாட்களில் தீர்க்கப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டம் – ஆளுநர் ஒப்புதல்! மீறினால் ரூ.5,000 அபராதம்!
மத்திய அரசு அமைத்துள்ள குறைகேட்பு மேல் முறையீடு குழுவில், ஒரு தலைவர், இரண்டு உறுப்பினர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.