தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்டம் – ஆளுநர் ஒப்புதல்! மீறினால் ரூ.5,000 அபராதம்!
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்வது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 19ம் தேதி சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த அவசர சட்டத்திற்கு தமிழக கவர்னர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அவசர சட்டம்:
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரிடம் கோரிக்கை வந்தது. இதனையடுத்து தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டை தடை செய்வதற்கான சட்டம் இயற்ற தேவையான ஆலோசனைகளை வழங்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு தனது ஆய்வின் அறிக்கைகளை முதல்வரிடம் சமர்ப்பித்தது.
Exams Daily Mobile App Download
இதன் அடிப்படையில் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதா அண்மையில் சட்ட பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போது இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து விரைவில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அமலுக்கு வரவுள்ளது.
இனி 24 மணி நேரமும் கடைகள், நிறுவனங்கள் திறக்க அனுமதி – அரசு அதிரடி அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
அதனால் இனி ஆன்லைன் விளையாட்டு குறித்த விளம்பரங்களை ஊடகங்கள் மற்றும் பிற சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் 1 ஆண்டு சிறை தண்டனையும் 5 லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும். மேலும் ஆன்லைன் விளையாட்டில் ஈடுபடுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.