மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த டபுள் ஜாக்பாட் – சூப்பர் அறிவிப்பு!

0
மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைத்த டபுள் ஜாக்பாட் - சூப்பர் அறிவிப்பு!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு 50 சதவீதமாக உயர்த்தப்பட்ட பின்னர் ஊழியர்களுக்கு கிடைக்கும் கூடுதல் பலன்கள் குறித்தான விவரங்கள் இப்பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் பலன்கள்:

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1, 2024 ஆம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வானது ஐம்பது சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஏழாவது ஊதிய குழு விதிமுறைகளின் படி மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியானது ஐம்பது சதவீதத்தை எட்டிய பின்னர் ஊழியர்கள் பெரும் பலன்களும் தானாக உயரும் தன்மை கொண்டவை. அதன்படி குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, விடுதி மானியம், மாற்றுத்திறனாளி பெண்களுக்கு சிறப்பு குழந்தை பராமரிப்பு தொகை போன்ற பலன்கள் 25 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

TNPSC EXAM 2024 : பொதுத்தமிழ் – முக்கிய வினாக்கள் முழு விளக்கங்களுடன்

உயர்த்தப்பட்ட பலன்களானது ஜனவரி 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்றும், ஊழியர்களின் மாதாந்திர சம்பளத்துடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட கல்வி உதவித் தொகை மாதம் ரூபாய் 2812 , இத்துடன் விடுதி மானியத்திற்கான தொகை ரூபாய் 8437 மாதந்தோறும் வழங்கப்படும். இதே போல் மாற்றுத்திறனாளி பெண்களுக்கான குழந்தை பராமரிப்பு சிறப்பு கொடுப்பனவு மாதத்திற்கு ரூபாய் 3 ஆயிரத்து 750 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!