தமிழகத்தில் அதிகரிக்கும் கடும் வெப்பநிலை – தவிக்கும் பொதுமக்கள்!

0
தமிழகத்தில் அதிகரிக்கும் கடும் வெப்பநிலை - தவிக்கும் பொதுமக்கள்!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேர நிலவரப்படி கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை பகுதியில் 5 சென்டிமீட்டர் மழைப் பொழிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்து வரும் சில நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

வானிலை அறிக்கை:

தென்தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழெடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தின் மற்ற மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இதே நிலையானது மே மூன்றாம் தேதி வரை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC EXAM 2024 : பொதுத்தமிழ் – முக்கிய வினாக்கள் முழு விளக்கங்களுடன்

மேலும் வட தமிழக உள் மாவட்டங்களின் ஒரு சில இடங்களில் மே ஒன்றாம் தேதி முதல் 3ஆம் தேதி வரை வெப்ப அலை வீசக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழக மாவட்டங்களில் அதிகரிக்கும் வெப்பநிலை காரணமாக மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் தேவையான முன்னேற்பாடுகளை கவனித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழக கடற்கரையோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களுக்கு எந்தவித எச்சரிக்கை அறிவிப்புகளும் தெரிவிக்கவில்லை.

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!