மத்திய அரசு ஊழியர்கள் பல மாதங்களாக எதிர்பார்த்து காத்திருக்கும் சம்பள உயர்வு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய இரண்டு தவணைகளுக்கான அகவிலைப்படி உயர்வுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பு 2024 ஜனவரி 1 தவணைக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு மார்ச் ஏழாம் தேதி அன்று வெளியாகியது. அரசு அறிவிப்பின்படி மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நாலு சதவீத அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அறிவிப்பின்படி மொத்தம் 50 சதவீத அகவிலைப் படியை மத்திய அரசு ஊழியர்கள் பெறுவார்கள்.
ஆதார் அட்டையில் புகைப்படத்தை மாற்றுவது அவசியமா? – முழு விளக்கம்!
ஆனால் ஜனவரி முதல் மார்ச் மாதத்திற்கான மூன்று மாத நிலுவைத் தொகை ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது. இந்த நிலுவை தொகையானது வரும் ஏப்ரல் மாத சம்பளத்துடன் கிடைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு காரணமாக மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஊழியர்கள் அடிப்படை சம்பளத்துடன் உயர்த்தப்பட்ட சம்பளத்தையும் பலனாக பெறுவார்கள்.