
மக்களே..உங்களுக்கு சொந்த தொழில் தொடங்க ஆசையா…?? ரூ. 2 கோடி வரை வழங்கும் மத்திய அரசின் அற்புதமான திட்டம் இதோ
மத்திய அரசு சொந்த தொழில் தொடங்குபவர்களுக்கு நிதி உதவி வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், குறிப்பாக மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் (MoMSME) மற்றும் இந்திய சிறு தொழில்கள் மேம்பாட்டு வங்கியால் (SIDBI) தொடங்கப்பட்ட “CGTMSE திட்டம்” குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, “சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் உத்திரவாத நிதி அறக்கட்டளை” என்று அழைக்கப்படும் இத்திட்டத்தின் கீழ் ரூ. 2 கோடி வரை நிதி உதவி கடனாக வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் ரூ. 5 லட்சம் வரை கடனுக்காக அணுகும் குறுந்தொழில்களுக்கு 80% உத்திரவாதக் காப்பீடு வழங்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் பெண்களுக்கும் சொந்த தொழில் தொடங்க கடன்கள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, இத்திட்டத்தில் குறைந்தபட்ச வட்டி விகிதமாக 8% அளிக்கப்படுகிறது. மேலும், இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் மத்திய அரசின் https://www.cgtmse.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.























