ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்திற்கு 4 நாட்கள் வேலை – மத்திய அரசு திட்டம்!!
நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்கள் இனி வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்கிற புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் வேலை செய்பவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் வேலை செய்தால் போதுமானது என கூறப்பட்டு உள்ளது.
வேலை நேர திட்டம்:
இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தையும் தாண்டி உழைப்பதால் பெரும் மனஉளைச்சலுக்கு ஆளாவதாக கூறப்பட்டு உள்ளது. தற்போது உள்ள நடைமுறையின் படி நாள் ஒன்றுக்கு 8 மணிநேரம் வீதம் ஒரு வாரத்திற்கு 6 நாட்கள் ஊழியர்கள் வேலை செய்ய வேண்டும். கொரோனா தொற்று காரணமாக தகவல் தொழில்நுட்ப நிறுவன ஊழியர்கள் பலரும் வீட்டில் இருந்தே பணிபுரியும் நிலை தொடர்கிறது.
யூபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் வயது வரம்பு தளர்வு – உச்சநீதிமன்றம் கேள்வி!!
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம், தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரம் என, வாரத்திற்கு 4 நாட்கள் வேலை செய்வதற்கான நடைமுறை திட்டத்தை வகுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இத்திட்டம் குறித்து அத்துறையின் செயலாளர் அபூர்வா சந்திரா கூறுகையில், தற்போது நாடு முழுவதும் நடைமுறையில் உள்ள ஒரு வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை என்னும் முறையில் எவ்வித மாற்றமும் இன்று தொடர்ந்து நீடிக்கும்.
நாடு முழுவதும் கல்லூரிகள் திறப்பு – யுஜிசியின் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்!!
இருப்பினும் ஒரு நாளைக்கு ஊழியர்கள் வேலை செய்வதற்கான நடைமுறைகளை மாற்ற திட்டமிடப்பட்டு உள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 10 மணிநேரம் என வாரத்தில் 5 நாட்களும், நாள் ஒன்றுக்கு 12 மணிநேரம் என 4 நாட்களும், நாள் ஒன்றுக்கு 8 மணிநேரம் வேலை செய்தால் வாரத்தில் 6 நாட்களும் வேலை செய்யும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு ஊழியர்கள் மற்றும் முதலாளிகள் மத்தியில் எவ்வித நிர்பந்தமும் இல்லை எனவும் அவர் கூறி உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்