மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்…விரைவில் அறிமுகமாகும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம்
மத்திய அரசு, அதன் ஊழியர்களுக்கு தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ், ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் ஓய்வூதியமாக வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது புதிதாக ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, இத்திட்டத்தின் மூலம் மத்திய அரசு ஊழியர்களுக்கு மாதந்தோறும் குறைந்தபட்சம் ரூ. 10,000 ஓய்வூதியத்தை வழங்க திட்டமிட்டுள்ளது. மேலும், இத்திட்டம் வருகின்ற ஏப்ரல் 1 ஆம் தேதியில் இருந்து நடைமுறைக்கு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
List of Countries Participated in G -20 Summit – Free PDF Download
மேலும், தேசிய ஓய்வூதிய திட்டமானது பங்குசந்தை மற்றும் கடன் சந்தைகளை பொறுத்து அமைவதால் ஓய்வூதிய தொகையானது அவ்வப்போது மாறுபடும். ஆனால், இந்த ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தில் உறுதியான ஓய்வூதியம் மாதந்தோறும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் இருக்கும் அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



























