செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு – மத்திய அரசு ஆலோசனை!
நாடு முழுவதும் உள்ள பள்ளிகளை படிப்படியாக செப்டம்பர் 1 முதல் பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் தற்போது ஊடரங்கு தளர்வுகள் 3.0 என்ற பெயரில் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதி வழங்கி உள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் பூட்டப்பட்டு உள்ளதால், மாணவர்களின் படிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே , மத்திய அரசு ஆகஸ்ட் 31 வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என அறிவித்தது.
பள்ளிகள் திறக்க அனுமதி:
இந்நிலையில், செப்டம்பர் 1 முதல் படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டுள்ளது. மாநிலங்களில் உள்ள கொரோனா நிலவரத்தை கருத்தில் கொண்டு அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், செப்டம்பர் 1ல் தொடங்கி நவம்பர் 14 வரை படிப்படியாக பள்ளிகளை திறக்க அனுமதிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பள்ளிகள் திறப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் ஆகஸ்ட் இறுதியில் மத்திய அரசு வெளியிடும்.
அக்டோபர் 15 முதல் கல்லூரிகள் திறப்பு – அரசு அதிரடி உத்தரவு !
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
I think it will not be followed