அக்டோபர் 15 முதல் கல்லூரிகள் திறப்பு – அரசு அதிரடி உத்தரவு !
கொரோனா பரவல் தீவிரம் அடைந்து வரும் இந்நிலையில் அக்டோபர் 15 முதல் ஆந்திர மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் திறக்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்.
அக்டோபர் 15 முதல் கல்லூரிகள் திறப்பு:
நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக மூடப்பட்டு உள்ளன. மேலும் ஆந்திராவில் நாளுக்கு நாள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு ஆளாகிவரும், இச்சூழலில் ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜகன் மோகன் ரெட்டி பல்வேறு பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர்களை நியமிப்பதற்கானஅனுமதியை வழங்கியுள்ளார். மேலும் அக்டோபர் 15 முதல் மாநிலம் முழுவதும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று ஒரு கூட்டத்தில் கூறியுள்ளார்.
மேலும் அதே நேரத்தில், செட் தேர்வுகளும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும். விஜயநகரம் மற்றும் பிரகாசம் மாவட்டத்தில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்படுவது குறித்து மேலும் தெரிவித்த முதல்வர், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கல்லூரிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.