பள்ளிகளில் மாணவர் சேர்க்கை – ஆகஸ்ட் 10 ல் முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளிகள் கல்லூரிகள் போன்ற கல்வி நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டிருந்தன.
பள்ளிகள் திறக்கப்படாததால் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மேலும் அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவதில் தாமதம் ஏற்படுவதால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தொலைக்காட்சி மூலமாக என பல வழிகளில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.
எனினும் புதிய கல்வி ஆண்டில் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு எப்படி நடத்துவது என்பது குறித்து பல எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. இன்னும் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாணவர் சேர்க்கை நடைபெறுமா என்ற சந்தேகங்கள் கிளம்பியுள்ளன.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடர்பாக வரும் ஆகஸ்ட் 10ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அறிவிப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு முடிவடைந்த பிறகே பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |