
வீட்டுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்கு நிதி உதவியா…?? மத்திய அரசின் சூப்பர் திட்டம்…!! இதோ உங்களுக்காக..
மத்திய அரசு குப்பைகள் இல்லாத நாட்டை உருவாக்க பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில், குறிப்பாக மத்திய அரசால் தொடங்கப்பட்டு, மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற “ஸ்வச் பாரத் மிஷன் – நகர்ப்புறம் 2.0” திட்டம் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்ப்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புறங்களில் உள்ள கழிவறை இல்லாத வீடுகளில், புதிதாக கட்டுவதற்கு நிதி உதவி வழங்கப்படுகிறது. மேலும், இதில் தமிழ்நாட்டை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 6,667 நிதி உதவி வழங்கப்படுகிறது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் சமூக கழிப்பறைகள், பொது கழிப்பறைகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை போன்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளும் செய்து தரப்படுகிறது. குறிப்பாக, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படம் மற்றும் வருமான சான்றிதழ் ஆகியவை இதற்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்களாகும். மேலும், இத்திட்டத்திற்கு விருப்பமுள்ளவர்கள் https://digilocker. meripehchaan.gov.in/ என்ற மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

























