மத்திய அரசு ஊழியர்களுக்கான முன்பணம் – மார்ச் 31 கடைசி நாள்!!
மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தில் உள்ள செலவுகளை சமாளிக்க ஏழாவது ஊதியக்குழு சார்பில் சிறப்பு பண்டிகைக்கால முன்பணம் பெற மார்ச் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பண்டிகைக்கால முன்பணம்:
2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கொரோனா தாக்கம் நாடு முழுவதும் உள்ள மக்களை அச்சுறுத்தி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பொருளாதார நிலைமையும், மக்களின் வருமானமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பண்டிகை காலத்தில் செலவுகள் அதிகமாக உள்ள காரணத்தால் அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே ஆறாவது ஊதியக் குழுவின் கீழ் சிறப்பு முன்பணமாக ரூ.4500 வழங்கப்பட்டது. அதனை ஏழாவது ஊதியக்குழு மூலமாக அதிகரித்து ரூ.10,000 வழங்கப்பட்டது. முன்பணமாக வழங்கும் தொகைக்கு ஊழியர்களிடம் இருந்து எந்த வட்டியும் வசூலிக்கப்படவில்லை. மேலும் இந்த தொகையை மாதம் ரூ.1000மாக 10 மாதங்களில் திருப்பி தரலாம்.
8 வங்கிகளின் பாஸ் புக், செக் புக் ஏப்ரல் 1 முதல் செல்லாது – RBI அறிவிப்பு!!
மத்திய அரசு ஊழியர்கள் இந்த திட்டத்தை பயன்படுத்த விண்ணப்பிக்க மார்ச் 31 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். இந்த தொகை முன்கூட்டியே வங்கிக்கணக்கில் டெபாசிட் பெறப்படும். ஏற்கனவே கொரோனா காலத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை ரத்து செய்துள்ளது. ஆனால் தற்போது இந்த அறிவிப்பு காரணமாக ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.