8 வங்கிகளின் பாஸ் புக், செக் புக் ஏப்ரல் 1 முதல் செல்லாது – RBI அறிவிப்பு!!
மத்திய நிதியமைச்சகமும், ரிசர்வ் வங்கியும் இணைந்து சிறு வங்கிகளை பெரு வங்கிகளுடன் இணைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இவ்வாறு இணைக்கப்பட்ட 8 வங்கிகளின் செக்புக், பாஸ்புக் போன்றவை ஏப்ரல் 1 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிகள் அறிவிப்பு:
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கின் விளைவாக பொருளாதாரம் பெரிதும் வீழ்ச்சி அடைந்தது. இதன் காரணமாக பல வங்கிகளில் வாராக்கடன் தொகை நிலுவையில் இருந்தது. எனவே வங்கிகளை வலிமைபடுத்தும் நோக்கில் மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் இணைந்து லாபம் இல்லாத சிறு வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைக்க உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது.
TN Job “FB Group” Join Now
அதற்காக தேனா வங்கி, விஜயா வங்கி, கார்ப்பரேஷன் வங்கி, ஆந்திர வங்கி, சிண்டிகேட் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா மற்றும் அலகாபாத் வங்கி போன்றவற்றை தேர்வு செய்தது. இந்த வங்கிகளை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இணைக்கப்பட்ட பெரிய வங்கிகளிடம் இருந்து செக் புக் மற்றும் பாஸ்புக் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் அவர்களின் IFSC மற்றும் MICR கோட் போன்றவை மாற்றப்பட உள்ளது. புதிய வங்கிகளில் மாற்றப்பட்டவர்கள் மொபைல் எண், முகவரி, நாமினி பெயர் போன்றவற்றை புதுப்பிக்க வேண்டியது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட மாதிரி தேர்வுகள் – மார்ச் 29 ஆம் தேதி முதல் தொடக்கம்!!
இந்நிலையில் மாற்றப்பட்ட வங்கி வாடிக்கையாளர்களின் காசோலை புத்தகங்கள் மற்றும் பாஸ் புத்தகங்கள் மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். ஆனால் சிண்டிகேட் வங்கி வாடிக்கையாளர்களுக்கு, அந்த வங்கி இணைக்கப்பட்ட கனரா வங்கி எம்.ஐ.சி.ஆர் குறியீடு, ஐ.எஃப்.எஸ்.சி குறியீடு, காசோலை புத்தகம், பாஸ் புக் போன்றவை 2021 ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவித்தது. எனவே அந்த வங்கியில் உள்ள பழைய வாடிக்கையாளர்கள் மட்டும் அச்சமடைய தேவை இல்லை. மற்றவர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.