எலக்ட்ரிக் சார்ஜ் நிலையம் அமைக்க வழிகாட்டு நெறிமுறைகள்..!! மத்திய அரசின் அசத்தலான திட்டம்..!!
இந்தியாவில் தற்போது எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் சொந்தமாக தொழில் தொடங்க விரும்பும் நபர்கள் எலக்ட்ரிக் வாகனத்திற்கு உதவும் சார்ஜ் நிலையங்களை வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும், அத்தகைய நிலையங்கள் அமைக்க சில வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிட்டுள்ளது.
மின்சார அமைச்சகம்:
மின்சார அமைச்சகம் சார்ஜிங் உள்கட்டமைப்பு உருவாக்க எந்த உரிமமும் தேவையில்லை என்று முடிவு செய்துள்ளது. மேலும் மின்சார பேட்டரிகளை சார்ஜ் செய்ய ,மின்சாரம் கடத்துதல் மற்றும் விநியோகித்தல் மற்றும் பரிமாற்றம் செய்ய அனுமதி தேவையில்லை.
செலவு:
ஒரு சார்ஜ் நிலையம் அமைக்க வேண்டும் என்றால் முதலில் குறைந்த முதலீட்டில் நிறுவனத்தை அமைத்து கொள்ளலாம்.
இலவசமாக 5 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு||மத்திய அமைச்சரவை அறிவிப்பு..!!
சார்ஜ் வகை:
எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்ய மின்னோட்ட வகையின் அடிப்படையில் AC மற்றும் TC என இரண்டு வகையான சார்ஜர்கள் உள்ளது.
மாநில அரசு:
வணிகம் மற்றும் குடியிருப்பு வளாகங்களில் சார்ஜ் ஸ்டேஷன்களை கட்டாயமாக அமைக்க வேண்டும் என்று மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.
விளம்பரம்:
சார்ஜ் நிலையங்கள் அமைக்க பெருமளவில் ஊழியர்கள் தேவைப்படாது. ஆகையால், , YOUTUBE, FACEBOOK, போன்ற இணையதளங்கள் மூலம் விளம்பரம் செய்து நிலையத்தை விரிவுபடுத்திக்கொள்ளலாம்.



























