இலவசமாக 5 லட்சம் மதிப்பில் மருத்துவ காப்பீடு||மத்திய அமைச்சரவை அறிவிப்பு..!!
கடந்த 2018 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் “ஆயுஷ்மான் பாரத்” திட்டம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்த திட்டத்தில், வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு 5 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கடந்த ஏப்ரல் மாதத்தில் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோர் பயனடையும் வகையில் “ஆயுஷ்மான் பாரத்” திட்டம் விரிவுபடுத்தப்படும் என்று மோடி அவர்கள் தெரிவித்திருந்தார்.
500 கோடி முதலீட்டில் விரிவுபடுத்தப்படும் CATERPILLAR நிறுவனம்..!! “முதல்வர் கையெழுத்து”..!!
இந்நிலையில், நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் “ஆயுஷ்மான் பாரத்” திட்டத்தின் கீழ் 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டோருக்கு 5 லட்சம் மதிப்பிலான இலவச மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் மூத்த குடிமக்கள் 6 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



























