நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இருப்பு – மத்திய அரசு அறிக்கை!!
மாநிலங்களுக்கு வழங்கிய தடுப்பூசி குறித்து அறிக்கை வெளியிட்டது மத்திய அரசு. மேலும் 94.47 லட்சம் கோவிட்-19 தடுப்பூசிகள் மாநில அரசுகளிடம் மீதம் இருக்கின்றது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்பூசி :
கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் புரவி வருகிறது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு பணிகளை மேற்கொண்டு ஊரடங்குகளை அறிவித்து வருகிறது. மேலும் 45 வயது மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 18 வயது மேற்பட்டோர்க்கு கொரோனா தடுப்பூசி மே 1 முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து மாநில அரசுகள் மருத்துவ கழகம் மூலம் தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய உத்தரவிட்டு வருகிறது.
இதன் மூலம் மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை மாநிலங்களுக்கு வழங்கி வருகிறது. ஆனால் மாநில அரசுகள் தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது, அதனால் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை என மத்திய அரசை குற்றம் சாட்டுகிறது. தடுப்பூசி நிலைப்பாட்டுக்கு மத்திய அரசு காரணமா? அல்லது தடுப்பூசி நிறுவனங்கள் தான் காரணமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இதனால் மத்திய அரசு மாநிலங்களுக்கு வழங்கிய கொரோனா தடுப்பூசி விவரங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
இன்று முதல் பேருந்து சேவைகள் நிறுத்தம் – மாநில அரசு அறிவிப்பு!!
அந்த அறிக்கையில், 94.47 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மாநில அரசுகளிடம் மீதம் இருக்கின்றன. தற்போது வரை மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் கிட்டதட்ட 17.02 கோடி இலவச தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கியிருப்பதாகவும், தமிழகத்துக்கு மட்டும் ஏறத்தாழ 71 லட்சத்து தடுப்பூசிகள் கொடுக்கப்பட்டிருப்பதாக கூறியுள்ளது.
மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பணி – சுற்றறிக்கை வெளியீடு!!
அதில் 3 லட்சம் தடுப்பூசிகள் உபயோகிக்கப்படாமல் உள்ளது. மேலும் 94.47 லட்சம் தடுப்பூசிகளை மாநில மற்றும் யூனியன் பிரதேசங்கள் மீதம் வைத்துள்ளன என்று மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது. யூனியன் பிரதேசங்களுக்கு 36 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த மூன்று நாள்களில் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்