மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பணி – சுற்றறிக்கை வெளியீடு!!
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் பயிலும் 3 மற்றும் 4 ஆம் ஆண்டு மாணவர்களை கொரோனா பணியில் ஈடுபடுத்தலாம் என மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
கொரோனா சிகிச்சை
இந்தியாவில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்து வருகிறது. அதனால் ஒவ்வொரு நாளும் 4 லட்சம் பேர் நோய் பாதிப்புக்குள்ளாகுகின்றனர். தினமும் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் நோயாளிகள் காத்து கிடக்கக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது. தவிர மஹாராஷ்டிரா, டெல்லி போன்ற இடங்களில் கொரோனா நோயாளிகளால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. தவிர கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் தட்டுப்பாடும் உருவாகியுள்ளது.
தமிழக முதல்வராக மே 7ம் தேதி ஸ்டாலின் பதவியேற்பு – ஆளுநரிடம் உரிமை கோரினார்!!
இதனால் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களை கொரோனா சிகிச்சையில் ஈடுபடுத்துவதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்து வந்தது. இந்நிலையில் 3 மற்றும் 4 ஆம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர்களை கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபடுத்த வேண்டும் என மருத்துவ கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்த மாணவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வீடியோ கால் அல்லது தொலைபேசி மூலமாகவும் கொடுக்கலாம். தவிர மருத்துவமனைகளில் கொரோனா பணிகளை ஒருங்கிணைத்தல், நோயாளிகளுக்கு முதல் கட்ட ஆலோசனை கொடுத்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தலாம். குறிப்பாக இந்த பணிகளில் ஈடுபட்டுள்ள 7000 மாணவர்களை எந்த காரணத்தை கொண்டும் கொரோனா வார்டுக்குள் அனுமதிக்க கூடாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்