தமிழக முதல்வராக மே 7ம் தேதி ஸ்டாலின் பதவியேற்பு – ஆளுநரிடம் உரிமை கோரினார்!!
தமிழகத்தின் முதல்வராக பதவியேற்க திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களிடம் உரிமை கோரியுள்ளார். 133 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருக்கிறார்.
சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 71 சதவீத வாக்கு பதிவு செய்யப்பட்டது. தேர்தலுக்கான முடிவுகள் கடந்த மே மாதம் 2 ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதில் திமுக 159 இடங்களில் தனது வெற்றியை பதித்து அமோகமாக வெற்றி பெற்றது. இதனை அடுத்து வரும் மே 7 ஆம் தேதி திமுக தலைவர் முக ஸ்டாலின் முதல்வராக பதவி ஏற்கவுள்ளார்.
மேற்கு வங்கத்தில் 3வது முறையாக முதல்வராகிறார் மம்தா – இன்று பதவி பிரமாணம்!!!
இதனை அடுத்து நேற்று நடைபெற்ற கூட்டத்தில் 125 எம்எல்ஏ.,கள் கலந்து கொண்டனர். பின், இவர் சட்டமன்ற உறுப்பினர்கள் மத்தியில் சட்டப்பேரவை உறுப்பினராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பின், ஸ்டாலின் அவர்கள் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து முதல்வராக உரிமை கோரியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இருந்து திமுக கட்சி தலைவர்களான துரைமுருகன், டி.ஆர்.பாலு, கே.என்.நேரு, ஆர்.எஸ்.பாரதி ஆகியோருடன் தமிழக ஆளுநர் மாளிகைக்கு சென்று உரிமை கோரியுள்ளார்.
வரும் மே மாதம் 7 ஆம் தேதி இவர் தமிழக முதல்வராக பதவி ஏற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முக ஸ்டாலின் அவர்கள் 133 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க இருக்கிறார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்