தமிழகத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பு பணிகள் குறித்தான தகவல்களை சென்னை மாநகராட்சி ஆணையர் வெளியிட்டுள்ளார்.
தீவிர பாதுகாப்பு:
தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவுகள் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடந்த வாக்குப்பதிவிற்குப் பின்னர் வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அரசின் முழு பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில் கடந்த சில நாட்களாக சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டில் இல்லை என்று தகவல்கள் வெளியானது.
TNPSC குரூப் 2 தேர்வுக்கு ரெடியா தேர்வர்களே? – முக்கிய தகவல் இதோ!
சென்னையில் வாக்கு எண்ணும் மையங்களை சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் அவர்கள் முழுமையாக ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் வாக்கு எண்ணும் மையங்களில் சிசிடிவி கேமராக்கள் முழுமையாக செயல்பட்டு வருவதாகவும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் மின்தடை ஏற்பட்டாலும் ஜெனரேட்டர் மூலம் கேமராக்கள் இயங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.