
“நாடு முழுவதும் தொடங்கிய CBSE பொதுத் தேர்வுகள் “..!! மொத்தம் எத்தனை தேர்வு மையங்களில் நடைபெறுகிறது தெரியுமா..?
இந்தியா முழுவதும் உள்ள 8 ஆயிரம் CBSE பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் இன்று (15.02.2025) தொடங்கியது. இத்தேர்வானது காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 01.30 மணி வரை நடைபெற்றது. இந்நிலையில், நடைபெற்ற பொதுத் தேர்வு குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்…!! “இம்மாத இறுதிக்குள் சம்பள உயர்வு கன்பார்ம்”…!!
அதாவது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் CBSE பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட பொதுத் தேர்வில் “சுமார் 44 லட்சம் மாணவர்கள் 7,834 மையங்களில் தேர்வு எழுதியுள்ளதாக” கூறப்படுகிறது. மேலும், இத்தேர்வானது “10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 10 தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4ஆம் தேதி வரையும் நடைபெறும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, “தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும்” என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) தெரிவித்துள்ளது.

























