CBSE 12ம் வகுப்பு தேர்வு முடிவு ஒரு மாதம் தாமதம்? யுஜிசி தகவல்!
சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைகான காலக்கெடுவை முடிக்க வேண்டாம் என அனைத்து பல்கலைகழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த முழு விவரத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தேர்வு முடிவு தாமதம்:
கொரோனா எதிரொலியால், 2020-2021 கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வை இரண்டு அமர்வுகளாக சிபிஎஸ்இ நடத்தியது. அதன்படி, முதல் பருவ பொதுத்தேர்வை நவம்பர்-டிசம்பர் மாதத்திலும், 2-வது பருவ பொதுத்தேர்வை மார்ச்-ஏப்ரல் மாதத்திலும் நடத்த முடிவு செய்தது. அவ்வாறே முதல் பருவ தேர்வுகள் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பரில் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன. இதைத்தொடர்ந்து, 2வது பருவ பொதுத்தேர்வுகள் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் 26 முதல் மே 24-ம் தேதி வரையும், அதேபோல், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 26 முதல் ஜுன் 15-ம் தேதியும் நடத்தப்பட்டன.
Exams Daily Mobile App Download
மேலும் 2 அமர்வுகளிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் செயல்பாடு, உள் மதிப்பீட்டு அடிப்படையிலும் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்திருந்தது. கடந்த வாரமே சிபிஎஸ்இ பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாவதில் மேலும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் உயர்கல்வி மாணவர் சேர்க்கை தீவிரமாகத் தொடங்கியுள்ள நிலையில், மருத்துவம், பொறியியல் மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட முக்கியப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் ஒரே மாதத்தில், ஜூலையில் நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் அனைத்தையும் என்டிஏ எனப்படும் தேசியத் தேர்வுகள் முகமை நடத்துகிறது.
TET போட்டித்தேர்வு ரத்து? வலுக்கும் கோரிக்கைகள்!
இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை கல்லூரிகள் முடித்து கொள்ளக்கூடாது என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவித்துள்ளது. மேலும், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் சேர சிபிஎஸ்இ மாணவர்களுக்கு உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் யுஜிசி கேட்டுக் கொண்டுள்ளது. இந்த நிலையில் தற்போது, சிபிஎஸ்இ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் ஒரு மாத காலம் ஆகும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர்களுக்கு யுஜிசி கடிதம் எழுதியுள்ளது. அதாவது ஜூலை மாத இறுதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்று முன்னர் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஆகஸ்ட் 2 வது வாரத்தில் முடிவுகள் வெளியாக வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.