
மாணவர்களே… ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்… சற்று முன் வெளியான முக்கிய தகவல்…!!
மத்திய இடைநிற்றல் கல்வி வாரியத்தால் (CBSE) 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் பிப்ரவரி 15 ஆம் தேதி தொடங்கி வெற்றிகரமாக நடத்தி முடிக்கபட்டுள்ளது. மேலும், இத்தேர்வை நடப்பாண்டில் மட்டும் சுமார் 45 லட்சம் மாணவர்கள் எழுதியுள்ளனர். மேலும், CBSE ஆனது 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை ஒரே நேரத்தில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில், இந்த வருடத்திற்கான தேர்வு முடிவுகள் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தமிழக மக்களுக்கு ஒரு ஜில் ஜில் நியூஸ்…!! அடுத்து வரும் 7 நாட்களுக்கு மழை…!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு…!!
அதாவது, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், மாணவர்கள் இந்த தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in, results.cbse.nic.in போன்ற இணையத்தளங்கள் மூலமாகவும், உமங், டிஜி லாக்கர் போன்ற செயலிகள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

























