
என்ன சொல்றீங்க…!! இனி இதுவும் ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படுமா..? வெளியான ஜாக்பாட் அறிவிப்பு…!!
பொதுவாக, ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படுகிறது. மேலும், பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், இங்கு மலிவு விலையில் தானியங்களை பெற்றே உணவு உண்கின்றனர். எனவே, இவர்களுக்கு சத்தான உணவுகளை வழங்குவதை நோக்கமாக கொண்டு ஆந்திர பிரதேச அரசு புதிய முயற்சி ஒன்றை எடுத்துள்ளது.
மாணவர்களே… ஓரிரு நாட்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்… சற்று முன் வெளியான முக்கிய தகவல்…!!
அதாவது, ஆரோக்கியமான ஆந்திர பிரதேசத்தை உருவாக்கும் நோக்கத்தோடு, அனைத்து ரேஷன் கடைகளிலும் சத்தான தானியங்களை வழங்க அந்த அரசு உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில், முதல் கட்டமாக வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் சிறுதானியமான ராகி மற்றும் பருப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தானியங்களை கொள்முதல் செய்வதற்காக டெண்டர் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

























