சிபிஎஸ்இ 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து – மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை!!
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் வேகமாக பரவி வருகிறது இதனால் பொதுத்தேர்வு எழுதும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து ட்விட்டரில் கோரிக்கை பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
பொதுத்தேர்வுகள் ரத்து:
நாடு முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்திற்கு அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 1,25,000க்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் பள்ளிகள் மூடப்பட்டன. சில மாநிலங்களில் இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டன.
TN Job “FB Group” Join Now
ஆனால் கொரோனா தாக்கம் அதிகமாக பரவி வந்தாலும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ பாடப்பிரிவு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் நேரடியாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் Cancelboardexams2021 என்ற வார்த்தை ட்விட்டரில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக ஒரு தேர்வு மட்டுமே நடத்தப்பட்டு மற்ற தேர்வுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டன. இப்போது கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும் நேரத்தில் பள்ளிகளை திறக்க திட்டமிட்டு வருவதால் மாணவர்கள் பெரும் மனஅழுத்தத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் மினி ஊரடங்கு – ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்!
எனவே மாணவர்களுக்கு நேரடி தேர்வு முறைகளை ரத்து செய்ய வேண்டும் என ட்விட்டர் மூலமாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவி ஒருவர் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளதால் ஒரு மாதம் வரை பொதுத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் ஒருவர் கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டுள்ளன. எனவே பொதுத்தேர்வுகள் எழுதுவதில் மாணவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
இவ்வாறாக பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் வந்த போதிலும் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ தேர்வுகள் நேரடியாக மட்டுமே நடைபெறும் என மத்திய இடைநிலை கல்வி அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.