தமிழகத்தில் கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!!
பள்ளிக் கல்வித்துறை முதன்மை செயலர் நேற்று (ஏப்ரல் 7) ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கல்வித்துறை அதிகாரிகள்:
தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த மாதம் 9 முதல் 11ம் வகுப்பு பள்ளிகள் மூடப்பட்டது. ஆனால் பொதுத்தேர்வு காரணமாக 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தொடர்ந்து நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற மே மாதம் 3ம் தேதி பொதுத்தேர்வு தொடங்கவுள்ளது. அதேபோல் அவர்களுக்கு அடுத்த வாரம் முதல் செய்முறை தேர்வுகளும் நடைபெறவுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பு தமிழகத்தில் இன்று முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு தேர்தல் காரணமாக 6 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தற்போது பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர் தீரச்குமார் நேற்று (ஏப்ரல் 7) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் விதிமுறைகள் – விரைவில் வெளியீடு!!
அந்த அறிவிப்பில் கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான பி.உஷா தஞ்சாவூர் முதன்மை கல்வி அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் தஞ்சாவூர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரியான எம்.ராமகிருஷ்ணன் கோவை முதன்மை கல்வி அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டது.