தமிழகத்தில் காவேரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் ஏப்ரல் 4 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
வெளியான அறிவிப்பு
தமிழகத்திற்கு காவிரியில் இருந்து சரியான அளவு தண்ணீரை பெற உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி ஒழுங்காற்று குழுவை அணுக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த குழு கூட்டத்தில் தமிழக அரசு தனக்கு தேவையான மற்றும் உரிமையுள்ள தண்ணீரை தர கர்நாடகத்தை வலியுறுத்துமாறு கேட்பதும், அதனை பரிசீலனை செய்து, அதன்பேரில் ஒரு முடிவு எடுத்து குறிப்பிட்ட அளவு நீரை திறக்க கர்நாடகத்தை அந்த அமைப்புகள் வலியுறுத்தி வருகிறது.
Cognizant நிறுவனத்தில் காத்திருக்கும் வேலைவாய்ப்புகள் – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!
அந்த வகையில் 29 வது காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டம் ஏப்ரல் 4 ஆம் தேதி கூட இருக்கிறது. இந்த கூட்டத்தில் வழக்கமான விவாதங்களுடன் மேகதாது அணை விவகாரம் குறித்து பேசலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமில்லாமல் பெங்களூரு குடிநீர் தேவைக்காக காவிரியில் இருந்து கூடுதல் தண்ணீர் வேண்டும் என கர்நாடக கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.