ஃபார்முலா 4 கார் பந்தயத்திற்கு எதிராக வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் நாளை விசாரணை!!
சென்னையில் வரும் ஆகஸ்ட் 31, செப்டம்பர் .1 தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடக்கிறது. அதை 8,000 பேர் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்படாத வகையில் போட்டிகள் நடைபெறும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் சென்னையில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1ஆம் தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பாஜக செய்தி தொடர்பாளர் பிரசாத் மனு ஒன்றை தாக்கல் செய்து இருந்தார்.
அமெரிக்கா செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின்.. முழு பயணத் திட்டம் இதுதான்.. விவரம் உள்ளே!!
அதன்படி இந்த வழக்கை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிகாரித்தது. மேலும் இந்த வழக்கு, விரைந்து விசாரிக்கும் அளவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என கருத்து கூறி, நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



























